Saturday 3 November 2012


முகத்திரைகள்....





என் முகத்திரைகள்
நித்தம் கிழிபட்ட வண்ணம்
என்னை
யாரென்று
இனங்காட்ட வேறு வழியின்றி
நானே...
                       *
சில்லறை நாணயங்களை
உண்டியலுக்குள்
தொலைத்து விட்டு
வறுமையை
விரட்டப் பார்க்கிறேன்...
ஒரு வகையில்....
                      *
கனவுகளில் இறந்து
கவிதைகளில்
உயிர்த்தெழும் ஈசல்களாய்
ஊற்றெடுக்கும்
என் எண்ணச் சிறகுகள்....
                       *
மீண்டும்
ஒரு
சுனாமி அலையாக ..
அல்ல
கவியலையாக
கிளர்ந்தெழுவோம்
புதிய
புலர்வொன்றுக்காக ......!
*