Saturday 28 December 2013

ஞாபகங்கள்

நிலவு
விரித்த பாயில்
உறங்கினேன்
திண்ணையில்....
           *
வண்டில் படலையைத்
திறந்து
வந்த கனவுகளில்
உன்
நினைவுகளையே
இருள்கள்
மேய்ந்து விட்டு
சென்றன....!
               *
எஞ்சி இருப்பவை
தலையணைக்குகீழ் உள்ள
உன்
ஞாபகங்கள்
மட்டுமே....!
          *
                ந-சிறீதரன்.

Thursday 26 December 2013

நந்தவன நாட்கள்....!

உன்
மாய பார்வைகளில்
எரியும்
என்
மிலேனிய இரவுகள்....!
மெழுகாய்
உள்ளம் உருகும்
இறுதிக்
கனவுத் துளிகள்...
இதயம்
கசிந்து
இன்றும் நினைவில்
பூசும்
நந்தவன நாட்கள்....!

Sunday 24 November 2013

மரணித்த
அந்த யுகங்களில்
கடைசிக் கணங்கள்
என்னை விழுங்கியபடி
நகைத்தன...
நடு நிசிகளும்
தொடு வானில்
நிலவின்றி
பௌர்ணமிகளை
உச்சரித்தன...
விம்மல் பொழுதுகளும்
மௌனங்களால்
விழிகளில்
கனவுகளையே
திரையிட்டு மகிழ்ந்தன..
அந்த வினாடிகளும்
இறுதி
அத்தியாயம் என்பது
யாருக்குத் தான்
புரிந்திருக்கும்....

Friday 28 June 2013