Wednesday 28 March 2012

நனைந்த நினைவுகள்.... !!!!!!


நீ
கிடைப்பாய் 
என 
உன் 
காதல் இதயம்
தேடி நின்றேன்..........!
நீயோ
காட்டினாய்
உன்
உறவின்
உதயங்களை........   !!!!!!!!!

Thursday 22 March 2012

இனிமை...

என் வாழ்வின்
இனிமையான
காலப்பகுதி
எது என்கிறாய்........!
நீயே
என்
இனிமை
என்று
அறியாமல்....!

Tuesday 20 March 2012

சுவாசமே.....


சுவர்களுக்கு 
சுவாசம்
கொடுத்தேன்...
சிற்பமானாய்.......!


ஏன்......


சிறந்த வார்த்தைகளால் 
உன்னை 
அலங்கரித்தேன்...
ஏன்
கவிதையாக
மறுக்கிறாய்.......!!!  

Sunday 18 March 2012

தேடல்


இதய
தேடல்களில்
சிக்கியதெல்லாம்
உன்
நினைவுகளும்
நனைந்த
விழிகளும்........ ♥

 

Saturday 17 March 2012

முகாரிகள்.....




இராகங்களுக்குள் 
இறந்து போன 
வரிகளை
வலிகளாக்கிக்கொள்கிறேன் ....
நீண்ட 
பிறப்புகளுக்காய்......!!!


விடுமுறை......<>


கனவுகளுக்காக 
விடுமுறை
வழங்கினேன்-உன்
விழிகளுக்கு.........! 
 
 

Tuesday 13 March 2012

அருகில்.... ♥


என் 
மெளனம்
பேசியது
உன்
வாழ்வின்
நிழல்களுடன்....!    
 

 

Sunday 11 March 2012

நெருடல்


நினைவுகள் வரவில்லை
எழுதுவதற்கு
நீ
வராத வேளைகளில்....!

பகடையான என் வாழ்வு......

 
அர்த்தங்கள்
மறுக்கப்பட்டப்போதிலும் 
உயிரற்ற 
என்
கவிதைக்கு
உணர்வு தரும்
உயிர் -எங்கு
என்ற 
எதிர்பார்ப்பில்
என்
விரல்களும்
என்
நினைவுகளும்.....!   


   

Tuesday 6 March 2012

காதல் மரித்து....



எப்போது புரியும் உனக்கு, என் அன்பே
உனக்கான என் காதல் மறித்து
வருடம் பல ஆன உண்மை!
வார்த்தைகளில் பஞ்சம் இப்போது அன்பு
நம் தொடக்கம் எப்படியோ?
பட்டசாய் வெடித்து, வெளிச்சவண்ணம் பாய்ச்சி
இப்போது மிச்சம் குப்பையாய்...

காதலின் சாயல் கூட காணாமல் போய் நாட்கள் பல
கண்ணில்...
உயிர்ப்புடன் தகிப்பதோ இன்று
ஊமையான கூக்குரலும்...
மூச்சடைக்கும் வாழ்க்கையும்...
சொல்லாத வெறுப்பும்...
உயிர் கொல்லும் தனிமையும்...
வண்ணம் பறித்த பார்வைகளும்...
கனவுகள் காணாமல் போன எதிர் காலமும்...
எப்படி இறந்து போனது என் காதல்...
சட்டென்று சாகவில்லை தான்
தினம் தினம்...

கொஞ்சம் கொஞ்சமாய்
ஒரு பார்வையில் சிறிது மறித்து...
ஒரு சொல்லில் கொஞ்சம்...
சந்தேகத்தில் இன்னும் வேகமாய்...
இறந்த என் காதலை எண்ணி
கண்ணீர் விட தோன்றும்...
ஆனால்
வேதனையை விட வெறுப்பு கூடுதல்
காரணம்...
என் காதலை நீ கொன்ற விதமோ...

யாருக்கு காயமும், வேதனையும், பாதிப்பும் கூடுதல்
இந்த உயிரற்ற விளையாட்டில்?
உனக்கா... எனக்கா...
மறித்தது என் காதல் என்ற உண்மை புதைத்து வைக்கலாம்தான்...
ஆனால்
அந்த புழுக்கம் போதும் நான் இறக்க
இதோ...
என் வாழ்வின் கசப்பு
நான் தொடும் எல்லாவற்றிலும் சாயமாய்...
இத்தனை வேதனை சகிக்க
எத்தனை காதல் இருந்திருக்க வேண்டும்
உன்மேல் என்னுள்...
எஞ்சி இருப்பது வறண்ட நான் மட்டும்
அடுத்து செய்வதறியாது
உன் நினைவுகள் புதைத்த கல்லறையில்
நானே காத்து!


Monday 5 March 2012

மிதக்கிறேன்.......



பிண்ணி பிணைந்து
குழப்ப சிக்கலாகி போனேன்...
உன்னால்
வண்ண குழும்பின் உள்!!!
சப்த இரைச்சல்கள் மேல்!!!
இப்போதோ
எண்ணங்களின் கூட்டில்
ஓசை இல்லாத பரந்த நிசப்தம்...
மிதந்து கொண்டே இருக்கிறேன்
வெளிச்சத்தின் வெப்பத்தில்...
உண்மைகளின் வேகம் தாக்கும் இங்கே
ஆன்மாக்களின் கூக்குரல் கேக்கும்
இன்பத்தின் உச்சமும் நிற்கும் எதிரே!
உயிரை சுற்றி
வட்ட வட்ட நீர் திவலைகள் போல
பந்தங்கள்!
அடுத்தடுத்து உருவாகி
வளர வளர
தூர தூரமாய் பிரிவோம்...
கடந்த காலங்களின் கைப்பு
நிமிட நேர கண்ணீர் துளி
கோபத்தில் கொட்டிய வார்த்தை சவுக்குகள்
எதிர் காலத்தை நோக்கிய பார்வை
எல்லாம் மாற்றும்
இதயத்தின் வடிவை!!!
சதுரமா ?
வட்டமா ?
இல்லை
வெறும் சதை தானா ?
மூச்சி நிற்கும் வரை
போராட்டம் தான்
வெறுமையின் விளிம்பில்
இருப்பினும்
என் நாளை
மாறலாம்!!!
எனக்கு கிடைக்காத நாளை
என் உயிருக்கு
நான் தர எண்ணி
குழப்ப கூட்டில்
மூழ்கி மூழ்கி
என் தினங்களில்
மிதக்கிறேன்...

Saturday 3 March 2012

ஹைக்கூ -4

 
ஏணிகளை 
நான் ஏற்றுகொள்வதில்லை 
நீ நிலவாக தொலைந்தபடியால்.......!

நிலவாக .......

 
நீண்ட  
இருளுக்குள் 
பாய் விரித்தேன் ....
நிலவாக- நீ
என்னை
சிறை செய்தாய்....!
    Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ ♥ .Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ 
ஒருபோதும் 
உன் 
கவிதைகள்
மரணிப்பதில்லை....
அடிக்கடி-நீ 
என்னைக்கொல்வதால்....!
     Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ ♥ .Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ
 

Friday 2 March 2012

ஏங்கும் வரம்....Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ ♥ .Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ

 
கனவிடம்
தூங்கும் வரம்
கேட்டேன்.......
நிலவிடம்
தாங்கும் வரம்
கேட்டேன்........
நீயோ
என்னிடம் 
நீங்கு வரம்
கேட்கிறாய்.....!