மரணித்த
அந்த யுகங்களில்
கடைசிக் கணங்கள்
என்னை விழுங்கியபடி
நகைத்தன...
நடு நிசிகளும்
தொடு வானில்
நிலவின்றி
பௌர்ணமிகளை
உச்சரித்தன...
விம்மல் பொழுதுகளும்
மௌனங்களால்
விழிகளில்
கனவுகளையே
திரையிட்டு மகிழ்ந்தன..
அந்த வினாடிகளும்
இறுதி
அத்தியாயம் என்பது
யாருக்குத் தான்
புரிந்திருக்கும்....