Sunday 24 November 2013

மரணித்த
அந்த யுகங்களில்
கடைசிக் கணங்கள்
என்னை விழுங்கியபடி
நகைத்தன...
நடு நிசிகளும்
தொடு வானில்
நிலவின்றி
பௌர்ணமிகளை
உச்சரித்தன...
விம்மல் பொழுதுகளும்
மௌனங்களால்
விழிகளில்
கனவுகளையே
திரையிட்டு மகிழ்ந்தன..
அந்த வினாடிகளும்
இறுதி
அத்தியாயம் என்பது
யாருக்குத் தான்
புரிந்திருக்கும்....