நிலவு விரித்த பாயில் உறங்கினேன் திண்ணையில்.... * வண்டில் படலையைத் திறந்து வந்த கனவுகளில் உன் நினைவுகளையே இருள்கள் மேய்ந்து விட்டு சென்றன....! * எஞ்சி இருப்பவை தலையணைக்குகீழ் உள்ள உன் ஞாபகங்கள் மட்டுமே....! * ந-சிறீதரன்.
உன் மாய பார்வைகளில் எரியும் என்மிலேனிய இரவுகள்....! மெழுகாய் உள்ளம் உருகும் இறுதிக் கனவுத் துளிகள்... இதயம் கசிந்து இன்றும் நினைவில் பூசும் நந்தவன நாட்கள்....!
Sunday 24 November 2013
மரணித்த அந்த யுகங்களில் கடைசிக் கணங்கள் என்னை விழுங்கியபடி நகைத்தன... நடு நிசிகளும் தொடு வானில் நிலவின்றி பௌர்ணமிகளை உச்சரித்தன... விம்மல் பொழுதுகளும் மௌனங்களால் விழிகளில் கனவுகளையே திரையிட்டு மகிழ்ந்தன.. அந்த வினாடிகளும் இறுதி அத்தியாயம் என்பது யாருக்குத் தான் புரிந்திருக்கும்....