kavithai in tamil
kavithai in tamil
Wednesday, 28 March 2012
நனைந்த நினைவுகள்.... !!!!!!
நீ
கிடைப்பாய்
என
உன்
காதல் இதயம்
தேடி நின்றேன்..........!
நீயோ
காட்டினாய்
உன்
உறவின்
உதயங்களை........ !!!!!!!!!
Thursday, 22 March 2012
இனிமை...
என் வாழ்வின்
இனிமையான
காலப்பகுதி
எது என்கிறாய்........!
நீயே
என்
இனிமை
என்று
அறியாமல்....!
Tuesday, 20 March 2012
சுவாசமே.....
சுவர்களுக்கு
சுவாசம்
கொடுத்தேன்...
சிற்பமானாய்.......!
ஏன்......
சிறந்த வார்த்தைகளால்
உன்னை
அலங்கரித்தேன்...
ஏன்
கவிதையாக
மறுக்கிறாய்.......!!!
Sunday, 18 March 2012
தேடல்
இதய
தேடல்களில்
சிக்கியதெல்லாம்
உன்
நினைவுகளும்
நனைந்த
விழிகளும்........ ♥
Saturday, 17 March 2012
முகாரிகள்.....
இராகங்களுக்குள்
இறந்து போன
வரிகளை
வலிகளாக்கிக்கொள்கிறேன் ....
நீண்ட
பிறப்புகளுக்காய்......!!!
விடுமுறை......<>
கனவுகளுக்காக
விடுமுறை
வழங்கினேன்-உன்
விழிகளுக்கு.........!
Tuesday, 13 March 2012
அருகில்.... ♥
என்
மெளனம்
பேசியது
உன்
வாழ்வின்
நிழல்களுடன்....!
Sunday, 11 March 2012
நெருடல்
நினைவுகள் வரவில்லை
எழுதுவதற்கு
நீ
வராத வேளைகளில்....!
பகடையான என் வாழ்வு......
அர்த்தங்கள்
மறுக்கப்பட்டப்போதிலும்
உயிரற்ற
என்
கவிதைக்கு
உணர்வு தரும்
உயிர் -எங்கு
என்ற
எதிர்பார்ப்பில்
என்
விரல்களும்
என்
நினைவுகளும்.....!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)