Tuesday, 28 February 2012

நானும் என் சுவர்களும்!!!



அறைக்குள் நுழைந்ததும்
என் சுவர்கள் என்னை இழுத்து அணைக்கிறது!
எப்படி போயிற்று இந்த தினம் என்று கேட்டபடி...

சிகப்பு சுவர் சொல்கிறது கருப்பு சுவரிடம்
இப்பதானே வந்தாள்...
செருப்பையாவது கழட்டவிடேன் என்று!

அழுகையோடு என் சுவர்களை பார்த்து சொன்னேன்
இன்றைய தினம் சுகமில்லை என்று!
எந்த சுவரிலும் சாயாது அறையின் மத்தியில் நின்று..

தினமும் என் பகல் முடிந்ததும் என் சுவர்கள்
துணையோடு தூங்குகிறேன்
என்னை அணைக்க போட்டிகளோடு தாலாட்டும் அவை!

காகிதத்தில் சிக்கா எழுத்துக்களால்...
காதுகளுக்கு போய் சேரா வார்த்தைகளால்...
பார்வையில் பதியா முகங்களால்...

என் இன்றைய தினமும் நிரம்பி வழியத்தான் செய்கிறது!
இன்னமும் வெற்றிகரமாய் வெறுமைகள் மட்டுமே
நிரப்புவேன் என் பேச்சில் மற்றவர்களிடம்!

என் நிர்வாணம், என் அழுகை, என் திமிர்,
என் திருட்டு, என் கோபம், என் பசி
எல்லாம் பார்த்தும் சுவர்களுக்கு என்மேல் தீராக்காதல்!

நிழல் உண்மைகள் எல்லாம் தெரிந்த சுவர்
என் பட்டாம்பூச்சியை கூட்டுப்புழுவாய் மாற்றும்!
இரவுகளில் என் அறை என்மேல் மடிகிறது...

வரண்ட செங்கலில் கூட எனக்கான காதல் மிச்சமிருக்க
என் நாட்களின் ஆசைகள் எல்லாம் வடியும் அவைகள் மேல்...
என்றும் காதலனாய் எனக்கு என் சுவர்கள் மட்டும் போதும்!

Monday, 27 February 2012

மருத்துவம்....

 

என்
நினைவுத்தூரலில்
நனைந்ததால்   
ஏற்பட்ட 
தும்மல் இது.......!
தேவையில்லை
வைத்தியம் ஒன்றும்....!
என்னை
நினைத்தாலே 
போதும்..........♥

ஹைக்கூ-3

கன்னக்காயங்களுக்கு
வைத்தியம்  கேட்டேன்
செருப்பு தைப்பவனிடம்.......!!! 

ஹைக்கூ - 2

தும்மலுக்கு மட்டும்
நான் வைத்தியரிடம் செல்வதில்லை.......
அடிக்கடி நீ நினைப்பதால்.....!!!

பறக்கும் தட்டு.....

அவசரப்பட்டு 
உன்
நினைவுகளில்
தரை இறங்கினேன்.....!
நீயோ
அச்சப்பட்டு
வேற்றுக் கிரகவாசி 
ஆக்கி விட்டாய்.....!!!

Sunday, 26 February 2012

மலரே....!

 




மலரே...!
உன் கனவுகளில் 
வந்து 
எனது கனவும்
கவிதை சொல்லும்...!
கவிதை சொல்லியே
தினம்-உன்னை
துயிலெழுப்பும்.....!
பூபாளமெல்லாம்-உன்
புன்னகையில் 
பூக்குமென்று
அறிந்து தான்
செடியாக பலமுறை
தவமிருந்தேன்........!
பூத்தது என்னவோ 
உண்மை தான் !
உதிரும் 
காரணம் தான்
இன்னும் 
புரியவில்லை....!     
                 

ஹைக்கூ ......

உன் கண்ணீர்த்துளி பிரசவித்தவுடன்
சிரித்துக்கொண்டே மடிகிறது
என் எண்ணப்பூக்கள்.......

Saturday, 25 February 2012

இரவுகள்


நினைவுகள்
இருக்கும் வரை 
மரணங்கள் இல்லை...!- இரவுகள்
 இறந்தாலும்-கலையாமல்
வருவேன்
கனவுகளில்.....!
                
காரணங்கள் 
சொல்வதற்கு
வாழ்வின் பயணங்கள்
காத்திருப்பதில்லை.....!
                
வரும்
ஒவ்வொரு நொடிகளும் 
மரணத்திற்கான 
முகவுரையே.....!
               
முடிந்தவரை
முகர்கின்றேன்
உன்
முடிவில்லா
கனவுகளை.....!
             

            


 

Thursday, 23 February 2012

நிஜங்கள் ....

 
என்
எழுத்தை
நேசித்தவளுக்கு
என்
விரல்களின்
விண்ணப்பம்.....!
         *
நிஜங்களை
உணர்ந்து கொள்
என்
நிழலுக்குள்.......!
        *
உன்
உயிருக்குள்
என் உயிர் 
இருப்பது
இன்று கூட
தெரியாதிருக்கும்
உனக்கு........!
        *
என்
நினைவில்
கையெழுத்திட்டுப்பார்        
உன்
கண்களில்
கண்ணீர் வரும்........!
         *
உன் மனதை
தொட்டுப்பார் 
நான்
துடித்துக் கொண்டிருப்பேன்......!
         *  
     

Wednesday, 22 February 2012

நீ மட்டும்...

 
ஓவியமலருக்கு 
விரல்கள் மட்டுமல்ல
விழிகளும் 
வேண்டும்......!
எனக்கு
உன்
நினைவு மட்டும்
போதும்....!