Wednesday, 4 April 2012

விதி..........

 
எனது காதல் வண்டிக்கு
காற்று போய்
விட்டது......!
ஓடவும் முடியாது
உருட்டவும் 
முடியாது.....! 
காற்றை பிடுங்கியது 
யார் என்று 
ஆய்வு செய்தேன்.....!
முட்களும் 
மறுத்து விட்டன ...
வீதியிடம்
கேட்டேன் ..
பயனில்லை....
காற்றிடம் 
நீதி கேட்டேன்....
விதியிடம்
கேட்கச்சொன்னது.....! 

Tuesday, 3 April 2012

எச்சங்கள்.....


சில வினாடிகள்
பல வருடங்களை
விழுங்கியது....!
நினைவுப்பள்ளத்தாக்கில்
கனவுகளின்
எச்சங்கள்........!
சிலேடையாக 
கூறக்கூட
ஏதுமில்லை....!
அஸ்தமணங்களுக்கு 
கூட 
ஆதவனுக்கு  
உரிமை  இல்லை
என்ற நிலை.......!
உதிர்ந்த மலர்களின் 
சருகுகளின் 
மேல் படரும்
எனது கவிதையின் 
உயிர்த்துளிகள்....... !
சொல்ல 
நினைத்ததொன்று 
சொல்லியதொன்று......!
பாலைவனத்தில் 
தட்டுபாடின்றி 
கிடைக்கும் 
எனது  
கண்ணீர்................ !
விழிகளால் 
பருகி யாரும் 
ஆறுதலடையலாம்......!
நிழல்களை 
தேடி தேடி 
உதிர்ந்த என் 
கண்ணீர் இதழ்கள்....!
இளைப்பாறும் 
இடத்திலும்
கானல்நீர்  விருந்தாளிகள்.....!

 
 
 


 

 

Monday, 2 April 2012

மனம் திறந்து.....

 
நீண்ட பிரயாசை
நீ 
கிடைக்கவேண்டுமென்று.....! 
இன்றும்....! என்றும்......!
கனவுகளிலும்
கவிதைகளிலும்
நினைவுகளிலும்
நீ தான்
வந்தாய்...........!
வசந்தம்  என்று
எண்ணி
பூரித்தேன்......! அன்று......!
நிஜம் தானா என்று  
என்னை ஓர் முறை
கிள்ளிப்பார்த்தேன்.....!
நீ
ஒரு நொடியில் 
கூறியது
உயிர் பட்டத்தின் 
நூல் 
அறுந்தது........!
இன்றும்
பறந்தபடி
அதே இடத்தில்.........!
 

வெளிச்சம்


செய்வதெல்லாம்
சரி என்று
நினைப்போம்......ஆனால்
சரி தவறு
அவனுக்கு மற்றும்
வெளிச்சம்.....!
வாழ்வின் வெற்றி
எமது கையில்
இல்லை என்றாலும்
தோல்வி எமக்கென்று
இருக்கும்...!
ஏமாற்றினோமோ அல்லது
எமாற்றப்பட்டோமோ
என்பதில் தெளிவு
நமக்கு இருக்க வேண்டும்.!
வாழ்வின்
வெற்றிகள்
எமக்கு  சரியான
நோக்கில் கிடைத்திருக்க
வேண்டும்......!
காதல் கிரீடங்கள்
உரியவர்களுக்கு மட்டும்
சொந்தம்......! 
யாரும் இதை சொந்தம்
கோர முடியாது......!
நேசித்தவர்களும்
நேசிக்கப்பட்டவர்களும்
என்றும்
உரிமையாளர்கள்......!
கனவுகளால்
சிறைப்பிடிக்கப்பட்டவர்கள்
சிக்கிவிட்டார்கள்......!
அவர்களின் சத்தம்
கேட்கும் அளவிற்கு
இங்கு யாரும் இல்லை......!


          

Sunday, 1 April 2012

ஒரு மயக்கம்.....

நினைவுகளை 
மறந்தேன்....
இன்று 
உன் நினைவுகளில்
உறங்கினேன்...!
இனிய இசையாக...!

Wednesday, 28 March 2012

நனைந்த நினைவுகள்.... !!!!!!


நீ
கிடைப்பாய் 
என 
உன் 
காதல் இதயம்
தேடி நின்றேன்..........!
நீயோ
காட்டினாய்
உன்
உறவின்
உதயங்களை........   !!!!!!!!!

Thursday, 22 March 2012

இனிமை...

என் வாழ்வின்
இனிமையான
காலப்பகுதி
எது என்கிறாய்........!
நீயே
என்
இனிமை
என்று
அறியாமல்....!

Tuesday, 20 March 2012

சுவாசமே.....


சுவர்களுக்கு 
சுவாசம்
கொடுத்தேன்...
சிற்பமானாய்.......!


ஏன்......


சிறந்த வார்த்தைகளால் 
உன்னை 
அலங்கரித்தேன்...
ஏன்
கவிதையாக
மறுக்கிறாய்.......!!!  

Sunday, 18 March 2012

தேடல்


இதய
தேடல்களில்
சிக்கியதெல்லாம்
உன்
நினைவுகளும்
நனைந்த
விழிகளும்........ ♥