Tuesday 3 April 2012

எச்சங்கள்.....


சில வினாடிகள்
பல வருடங்களை
விழுங்கியது....!
நினைவுப்பள்ளத்தாக்கில்
கனவுகளின்
எச்சங்கள்........!
சிலேடையாக 
கூறக்கூட
ஏதுமில்லை....!
அஸ்தமணங்களுக்கு 
கூட 
ஆதவனுக்கு  
உரிமை  இல்லை
என்ற நிலை.......!
உதிர்ந்த மலர்களின் 
சருகுகளின் 
மேல் படரும்
எனது கவிதையின் 
உயிர்த்துளிகள்....... !
சொல்ல 
நினைத்ததொன்று 
சொல்லியதொன்று......!
பாலைவனத்தில் 
தட்டுபாடின்றி 
கிடைக்கும் 
எனது  
கண்ணீர்................ !
விழிகளால் 
பருகி யாரும் 
ஆறுதலடையலாம்......!
நிழல்களை 
தேடி தேடி 
உதிர்ந்த என் 
கண்ணீர் இதழ்கள்....!
இளைப்பாறும் 
இடத்திலும்
கானல்நீர்  விருந்தாளிகள்.....!

 
 
 


 

 

No comments:

Post a Comment