சில வினாடிகள்
பல வருடங்களை
விழுங்கியது....!
நினைவுப்பள்ளத்தாக்கில்
கனவுகளின்
எச்சங்கள்........!
சிலேடையாக
கூறக்கூட
ஏதுமில்லை....!
அஸ்தமணங்களுக்கு
கூட
ஆதவனுக்கு
உரிமை இல்லை
என்ற நிலை.......!
உதிர்ந்த மலர்களின்
சருகுகளின்
மேல் படரும்
எனது கவிதையின்
உயிர்த்துளிகள்....... !
சொல்ல
நினைத்ததொன்று
சொல்லியதொன்று......!
பாலைவனத்தில்
தட்டுபாடின்றி
கிடைக்கும்
எனது
கண்ணீர்................ !
விழிகளால்
பருகி யாரும்
ஆறுதலடையலாம்......!
நிழல்களை
தேடி தேடி
உதிர்ந்த என்
கண்ணீர் இதழ்கள்....!
இளைப்பாறும்
இடத்திலும்
கானல்நீர் விருந்தாளிகள்.....!
No comments:
Post a Comment