Monday 2 April 2012

மனம் திறந்து.....

 
நீண்ட பிரயாசை
நீ 
கிடைக்கவேண்டுமென்று.....! 
இன்றும்....! என்றும்......!
கனவுகளிலும்
கவிதைகளிலும்
நினைவுகளிலும்
நீ தான்
வந்தாய்...........!
வசந்தம்  என்று
எண்ணி
பூரித்தேன்......! அன்று......!
நிஜம் தானா என்று  
என்னை ஓர் முறை
கிள்ளிப்பார்த்தேன்.....!
நீ
ஒரு நொடியில் 
கூறியது
உயிர் பட்டத்தின் 
நூல் 
அறுந்தது........!
இன்றும்
பறந்தபடி
அதே இடத்தில்.........!
 

No comments:

Post a Comment