Wednesday 4 April 2012

கி.பி 3012 .....

 
ஏறக்குறைய 
ஆயிரம் வருடங்களுக்கு முன்.....

கனவுகளின் 
சாம்ராஜ்யங்களின்  
உன்னத காலம்........!
மனித மனங்களினால் 
காதலுக்கு 
பட்டடை சூடி 
மனம் மகிழ்ந்த 
பொழுதுகள்....
சிலர் வாழ்க்கையை 
வென்றார்கள் ...
சிலர் தோற்றார்கள்...!
சிலர் தொலைத்தார்கள்.....!
அவர்களின் அன்றைய
கனவுக்கவிதைகளை
அடுத்து வரும் 
கவித்தொகுப்பில்
காணலாம்......!
       *
உன்
நினைவுச்சுவர்களில்
புரையோடினேன்...
கவிதைகளால் 
அரித்தும் விட்டேன்.
இன்னும் ஏன் 
உறக்கம் 
உன் விழிகளில்.....!
          *
கடிகாரத்துடன்
சுற்றினேன் 
நாட்காட்டியுடன் 
தினமும் 
கிழிக்கப்பட்டேன்
இழந்தவைகள்
இளமைகள் தான்.....!
         *
      
 
 

No comments:

Post a Comment