Monday 16 April 2012

கி.பி-3012 .........

 
என் நினைவுகளும் 
உன் நினைவுகளும் 
அடிக்கடி
மோதிக்கொள்ளும் 
பனிப்போர்க்காலம் இது.....!
காதல் 
நம்மிருவருக்கும் 
பொதுவென்றாலும்
 என் காதல் 
எனக்கு பெரிது
என்பது 
இந்த வினாடிவரை 
சத்தியமானதொன்றாகும் ......!
உன்னை 
பொறுத்தவரையில் 
காதல் மரித்ததாகவே 
கருதுகின்றாய்.....!
என்னைப்பொறுத்தவரையில்
கோடி யுகங்களும் 
வாழும் ஒன்றாகும்......!
பலரால் என் காதல் 
சின்னாபின்னமாக 
கிழிக்கப்பட்டப்போதிலும் 
என் இதயத்தில் 
இன்னும் காத்திரமாக 
பாதுகாக்கப்பட்டப்படி .......!
கருவறையில் சிசுவைப்போல.....!
முட்டை ஓட்டினுள் குஞ்சைப்போல....!
                               *
குழந்தை நிலாவிற்கு 
ஆசைப்படுவது போல 
உன் 
நினைவுகளை  அடிக்கடி
அசைப்போட்டு 
மகிழும் என் 
கனவுக் கவிதைகள்......!
                  *
இரவுகளில் 
அழும்போது 
கூட 
நீ 
இல்லாத 
வெறுமை 
நெஞ்சைப்பிழிந்தெடுக்கும் ...!
                    *
என்
வாழ்வின் குறி
நீயாக
இருக்க
அன்றைய சந்தர்ப்பங்கள்
ஏனோ 
சதிக்குள்
கருகிவிட்டன......!
             *
காலத்தராசுகள் அன்று 
உன்னை
முழு நிலவாக்கி 
இருந்தால்
இன்று
உன்னுடன் 
இணைந்து
இக்கவிதை எழுதியிருப்பேன்.......!

                      *
இன்றும்
ஒரு ஏக்கம்.......!!!!
நீ
கனவுகளில் 
வருவது போன்று
என்னைப்புரிந்து
கொள்வாயா என்பது தான்......  !
                  *

  

 
 
 
  

No comments:

Post a Comment