Friday 17 February 2012

கனவுப்பூக்கள்

சுவாசமே!
என் சிறகுகளுக்கு 
தென்றலை மட்டும்
தூதனுப்பு ........!
          *
மலர்களால்
நீ
தூவும்
வாசலுக்குள்
என்
உயிர் வந்து
செல்லும்.....!
           *
நீ
அறியாமல்
காத்திருப்பாய்
நான் வந்திருந்தும்....!
              *
திரும்பிப்பார்...!
           *
பலமுறை
கொல்லப்பட்டேன்
உன் 
நினைவுகளால்.......!
மறுபடியும்
உயிர்த்தெழுந்தேன்
உன்
கனவுகளால்...!
           *   
இங்குள்ள 
ஒவ்வொரு எழுத்துக்களும் 
ஒரு வகையில்
கல்லறைகள் தான்.....!
            *
காணிக்கையாக்க 
உயிர் 
ஒன்றுதான் 
உடலுடன் உரிமை
பேசியபடி
புரட்சி செய்கிறது.....!
              *
நேசங்களுடன் 
விழிகளும்
அடிக்கடி விம்மியபடி ...!
விரல்கள் மட்டும்
கவிதைகளுடன்
ஆறுதல் சொன்னபடி....
உனக்கும் எனக்கும்.............!!!    
        

No comments:

Post a Comment