என் சிறகுகளுக்கு
தென்றலை மட்டும்
தூதனுப்பு ........!
*
*
மலர்களால்
நீ
தூவும்
வாசலுக்குள்
என்
உயிர் வந்து
செல்லும்.....!
*
*
நீ
அறியாமல்
காத்திருப்பாய்
நான் வந்திருந்தும்....!
*
*
திரும்பிப்பார்...!
*
*
பலமுறை
கொல்லப்பட்டேன்
உன்
நினைவுகளால்.......!
மறுபடியும்
உயிர்த்தெழுந்தேன்
உன்
கனவுகளால்...!
*
*
இங்குள்ள
ஒவ்வொரு எழுத்துக்களும்
ஒரு வகையில்
கல்லறைகள் தான்.....!
*
*
காணிக்கையாக்க
உயிர்
ஒன்றுதான்
உடலுடன் உரிமை
பேசியபடி
புரட்சி செய்கிறது.....!
*
*
நேசங்களுடன்
விழிகளும்
அடிக்கடி விம்மியபடி ...!
விரல்கள் மட்டும்
கவிதைகளுடன்
ஆறுதல் சொன்னபடி....
உனக்கும் எனக்கும்.............!!!
No comments:
Post a Comment