14 -12 -2009 இல் ஆக்கப்பட்டது.
*
புறப்பட்டுச்சென்றேன்
புரியாத
நினைவுகளுடன்!
*
கவிதைக்கு
சலங்கை கட்டி
கனவுகளுக்கு
மெட்டி போட்ட
உன்
மெழுகு நினைவுகள்!
*
எனது கவிதை
கண்ணீர் வடித்தது
என்
விழிகளுக்காய்!
*
விளக்கிழந்த
என்
வாழ்வில்
ஒளியேற்றும்
வெள்ளோட்டம்
வருமோ நாளை
என்ற
ஏக்கம்
என் கவிதைக்கு!
*
எது நிற்குமோ
தெரியவில்லை!
கடிகாரமும்
என் இதயத்துடன்
போட்டியிட்டபடி!
*
No comments:
Post a Comment