Saturday 18 February 2012

விழிகள்

14 -12 -2009 இல் ஆக்கப்பட்டது.
               *
புறப்பட்டுச்சென்றேன்
புரியாத
நினைவுகளுடன்!
               *
கவிதைக்கு
சலங்கை கட்டி
கனவுகளுக்கு
மெட்டி போட்ட
உன்
மெழுகு நினைவுகள்!
              *
எனது கவிதை
கண்ணீர் வடித்தது
என்
விழிகளுக்காய்!
             *
விளக்கிழந்த
என்
வாழ்வில்
ஒளியேற்றும்
வெள்ளோட்டம்
வருமோ நாளை
என்ற
ஏக்கம்
என் கவிதைக்கு!
              *
எது நிற்குமோ
தெரியவில்லை!
கடிகாரமும்
என் இதயத்துடன்
போட்டியிட்டபடி!
              *
 
                

No comments:

Post a Comment